100 அடி உயரத்தில் போராட்டம் நடத்தும் குடும்பம்

 

100 அடி உயரத்தில் போராட்டம் நடத்தும் குடும்பம்

100 அடி உயர நீர் தேக்க தொட்டியின் மேல் ஏறி நின்று ஒரு குடும்பமே போராடி வரும் விவகாரம் நெல்லை மாவத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மேலப்பாளையம் அடுத்த கணேசபுரத்தில் வசித்து வருபவர் கணேசன். சேவியர் காலனியில் இவருக்கு சொந்தமான நிலம் இருந்ததாகவும், அந்த நிலத்தில் மாநகராட்சி நிர்வாகம் மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை கட்டியிருக்கிறது. இதனால் தனக்கு உரிய இழப்பீடு வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்திடம் கடந்த 10 ஆண்டுகளாக கேட்டு வந்தும் பிரயோசனமில்லை.

100 அடி உயரத்தில் போராட்டம் நடத்தும் குடும்பம்

இதுதொடர்பாக அவர் வழக்குதொடுத்தும் தனக்கு இதுவரையிலும் நியாயம் கிடைக்காததால், கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம்தேதி அன்று 100 அடி உயர நீர் தேக்க தொட்டி மேல் ஏறி நின்றுகொண்டு, தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார் கணேசன். போலீசார் வந்த அவரை சமாதானப்படுத்தி கீழே இறக்கி விட்டனர். அதன்பின்னரும் இழப்பீடு கிடைக்காததால், இன்று மனைவி, மகளுடன் நீர் தேக்க தொட்டியின் மேல் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

100 அடி உயரத்தில் ஒடு குடும்பம் போராட்டம் நடத்தியதால் நெல்லை மாவட்டம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் வந்து மூன்று பேரையும் சமாதானப்படுத்தி கீழே இறக்கியுள்ளனர்.

இதற்கு மேலும் இழப்பீடு தரவில்லை என்றால், குடும்ப அட்டை, ஆதார் அட்டை அனைத்தையும் ஆ ட்சியரிடம் ஒப்படைத்துவிட்டு அகதிகளாக எங்காவது போகப்போகிறோம் என்று கணேசன் கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார்.