100 பெண்களின் வீடியோக்கள்! அடையாறு போலீசாரை அதிரவைத்த என்ஜினியர்

 

100 பெண்களின் வீடியோக்கள்! அடையாறு போலீசாரை அதிரவைத்த என்ஜினியர்

சென்னை தண்டையார்பேட்டை முத்தமிழ் நகரை சேர்ந்தவர் அருண் கிரிஸ்டோபர்.(வயது25) பி.இ. படித்த இவர் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக இருந்து வருகிறார். சைதாப்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவியுடன் இவருக்கு இன்ஸ்டாகிராமில் நட்பு ஏற்பட்டிருக்கிறது. 2 மாதம் இருவரும் மணிக்கணக்கில் பேசியுள்ளனர். தனது நிர்வாண படங்களை அருணுக்கு அனுப்புகிற அளவுக்கு நெருக்கமாக பேசி வந்துள்ளார்.

இந்த மாணவி்யின் மூலமாக அவரது தோழிகளையும் வளைக்க நினைத்த அருண், பேச்சு மயக்கத்திலேயே மாணவியின் இன்ஸ்டாகிராம் கணக்கின் பாஸ்வேர்ட்டை வாங்கி, அம்மாணவியின் தோழிகள் அனைவருக்கும் மெசேஜ் அனுப்பி வலை வீசியிருக்கிறார் அருண்.

100 பெண்களின் வீடியோக்கள்! அடையாறு போலீசாரை அதிரவைத்த என்ஜினியர்

தங்களின் செல்போனுக்கு தொடர்ந்து ஆபாசமாக வந்த மெசேஜ்ஜினால் அதிர்ந்த அம்மாணவிகள், தோழியின் தந்தையிடம் சொல்லி கலங்கி இருக்கிறார்கள்.

மாணவியின் தந்தை அருணிடம் இதுகுறித்து கேட்டு கண்டித்தபோது, அவரது மகளின் நிர்வாண போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிரப்போவதாக மிரட்டியுள்ளார்.

இதனால் அவர், அடையாறு துணை ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறார். அவரின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் மூலமாக அருணை பிடித்திருக் கிறார்கள். அருணிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் இருந்த ஒரு செயலியை சீக்கிரத்தில் ஓபன் செய்யமுடியவில்லை. நீண்ட போராட்டத்திற்கு பின்னர் அதை திறந்து பார்த்தபோது, அதில் 100க்கும் மேற்பட்ட பெண்களின் புகைப்படங்களும், வீடியோக்களும் இருந்தது கண்டு போலீசார் அதிர்ந்தனர்.

இதையடுத்து அருணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.