“வருமானத்தைவிட 1000 மடங்கு சொத்து” : சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளர் பாண்டியன் குறித்த திடுக்கிடும் தகவல்!

 

“வருமானத்தைவிட 1000 மடங்கு சொத்து” : சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளர் பாண்டியன் குறித்த திடுக்கிடும் தகவல்!

லஞ்சப்புகாரில் சிக்கிய சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளர் பாண்டியன் வருமானத்தைவிட 1000 % சொத்து குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“வருமானத்தைவிட 1000 மடங்கு சொத்து” : சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளர் பாண்டியன் குறித்த திடுக்கிடும் தகவல்!

சுற்றுச்சூழல்துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய பாண்டியன் வீட்டில் சமீபத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்துள்ளதாக எழுந்த புகாரில் நடந்த சோதனையில், வீட்டிலிருந்து ரூ.1.37 கோடி கணக்கில் வராத பணமும், 3 கிலோ தங்க நகைகளும் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சென்னையில் லஞ்ச ஒழிப்புத் துறையால் பாண்டியன் கைது செய்யப்பட்டார். அத்துடன் அவர் கண்காணிப்பாளர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

“வருமானத்தைவிட 1000 மடங்கு சொத்து” : சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளர் பாண்டியன் குறித்த திடுக்கிடும் தகவல்!

இந்நிலையில் லஞ்சப் புகாரில் சிக்கிய சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியன் வருமானத்தை விட ஆயிரம் மடங்கு சொத்து குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் எவ்வளவு சொத்துக்கள் உள்ளது என்பது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவணங்களை முழுமையாக கணக்கிட்டபிறகு வருமானவரித்துறைக்கு கடிதம் எழுத, லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டுள்ளது.