1000 பேருடன் படப்பிடிப்பா? பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கிற்கு குவாலியர் அரண்மனையில் அனுமதி தர மறுப்பு!

 

1000 பேருடன் படப்பிடிப்பா? பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கிற்கு குவாலியர் அரண்மனையில் அனுமதி தர மறுப்பு!

ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’. புகழ்பெற்ற இந்த நாவலை  இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாகப் படமாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

 


 

லைகா நிறுவனம் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில்  விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, சரத்குமார், நடிகர் பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

 


 

இப்படத்திற்குப்  பாடலாசிரியர் கபிலன் வரிகள் அமைக்க,  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

ttn

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 25 தேதி உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் அரண்மனையில் படப்பிடிப்பு நடப்பதாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதம் படத்தின் முக்கிய காட்சிகள் அங்கு எடுக்க திட்டமிட்டிருக்கிறார் மணிரத்னம் .

ttn

இதற்காக அனுமதி கேட்க சென்ற இடத்தில் எத்தனை நபர்கள் படப்பிடிப்புக்காக வருவீர்கள்? என்று கேட்டதற்கு, நடிகர்,நடிகைகள் டெக்னீஷியன் 250 பேர்,மும்பையிலிருந்து 250 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ,லோக்கலில் 500 பேர் என ஆக மொத்தம் 1000 பேர்  என்று சொல்ல, அதை கேட்டு அதிர்ச்சியடைந்த குவாலியர் அரண்மனை நிர்வாக அதிகாரிகள் பர்மிஷன் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டனராம். இதனால்  அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் இயக்குநர் மணிரத்னம் குழப்பத்தில் இருக்கிறாராம்.