‘1000 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசையுடன் வளைகாப்பு’ : அசத்திய அதிமுக எம்.எல்.ஏ!

 

‘1000 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசையுடன் வளைகாப்பு’ : அசத்திய அதிமுக எம்.எல்.ஏ!

ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, அதிமுக எம்.எல்.ஏ ஆறுக்குட்டி 1000 பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி அசத்தியிருக்கிறார்.

‘1000 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசையுடன் வளைகாப்பு’ : அசத்திய அதிமுக எம்.எல்.ஏ!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வரும் 24ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அதிமுக பிரமுகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், 1000 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்திய அதிமுக எம்.எல்.ஏவின் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

‘1000 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசையுடன் வளைகாப்பு’ : அசத்திய அதிமுக எம்.எல்.ஏ!

கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி தலைமையில், கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் இருக்கும் தனியார் மண்டபத்தில் இந்த வளைகாப்பு விழா நடைபெற்றது. அதில், அமைச்சர் வேலுமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். எம்எல்ஏ அருண்குமார் இந்த நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை அமைச்சர் வேலுமணி, குத்து விளக்கு ஏற்றி தொடக்கி வைத்தவுடன் ஆயிரம் பெண்களுக்கும் நலங்கு வைக்கப்பட்டது.

‘1000 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசையுடன் வளைகாப்பு’ : அசத்திய அதிமுக எம்.எல்.ஏ!

இதைத் தொடர்ந்து மஞ்சள், குங்குமம், பழங்கள் மற்றும் பணம் அடங்கிய சீர்வரிசை பொருட்களை அமைச்சர் வேலுமணி, கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில், கர்ப்பிணி பெண்கள் அனைவர்க்கும் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. ஜெயலலிதா பிறந்தநாளுக்கு இன்னும் 6 நாட்களுக்கு மேல் இருக்கும் நிலையில், இது போன்ற என்ன நிகழ்ச்சி எல்லாம் நடக்குமோ என வழி மேல் விழி வைத்துக் காத்துக் கிடக்கிறார்கள் அப்பகுதி மக்கள்…!