“தியேட்டர்களில் 100% ரசிகர்கள் அனுமதியை திரும்ப பெற வாய்ப்பு” : அமைச்சர் விஜயபாஸ்கர்

 

“தியேட்டர்களில் 100% ரசிகர்கள் அனுமதியை திரும்ப பெற வாய்ப்பு” : அமைச்சர் விஜயபாஸ்கர்

திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்கும் முடிவு திரும்பப்பெற வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

“தியேட்டர்களில் 100% ரசிகர்கள் அனுமதியை திரும்ப பெற வாய்ப்பு” : அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்நிலையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3.5 கோடி மதிப்பிலான புதியஇருதய சிறப்பு சிகிச்சை பிரிவு மற்றும் கேத் லேப் சிகிச்சை பிரிவினை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ” மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நாளை தமிழகம் வருகிறார். ஒத்திகை நாளை நடக்கவுள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி செல்லுவதற்கான பூர்வாங்க பணிகளை ஆய்வு செய்கிறார். திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்கும் முடிவை திரும்பப்பெறுவது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நல்ல முடிவு எடுக்கப்படும். பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளதால் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்கும் முடிவு திரும்பப்பெற வாய்ப்பு உள்ளது. மத்திய அரசின் பொதுச்சுகாதார விதிகளில் எந்த சமரசமும் இருக்காது” என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

“தியேட்டர்களில் 100% ரசிகர்கள் அனுமதியை திரும்ப பெற வாய்ப்பு” : அமைச்சர் விஜயபாஸ்கர்

முன்னதாக தமிழகத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் 100% ரசிகர்கள் அனுமதியுடன் தியேட்டர்கள் செயல்பட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய உள்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..