தமிழ்நாட்டில் நீட்தேர்வு 100% ரத்து செய்யப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!

 

தமிழ்நாட்டில் நீட்தேர்வு 100% ரத்து செய்யப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!

தமிழ்நாட்டில் நீட் தேர்வு 100 சதவீதம் ரத்து செய்யப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.

சென்னையில் இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் செய்யப்பட்ட அளவிற்கே தற்போதும் பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும், தினசரி 1.30 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாகவும் கூறினார். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,415 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக கூறிய அவர், மாநிலத்தில் தொடர்ந்து 36-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும் கூறினார்.

தமிழ்நாட்டில் நீட்தேர்வு 100% ரத்து செய்யப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மேற்கு மண்டலத்தை சேர்ந்த 9 மாவட்ட மருத்துவர்களுடன் காணொலியில் ஆலோசிக்கப்பட்டதாக கூறிய அவர், மகப்பேறு பரிசோதனைக்கு வரும் தாய்மார்களுக்கு யோகா, மூச்சுப்பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், அரசு மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு சுகப் பிரசவம் ஏற்படுவதற்காக பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் நீட் தேர்வு 100 சதவீதம் ரத்து செய்யப்படும் என கூறிய அமைச்சர், மாணவர்கள் பயிற்சிக்கு செல்வதை தடுத்து, ஒருவேளை கால தாமதம் ஏற்பட்டால் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று கூறினார். மேலும், நீட் எதிர்ப்பு தீர்மானம் குடியரசு தலைவருக்கு சென்றால், அது ஒப்புதலோடு தான் திரும்ப வேண்டும் என்று கூறினார்.