விவசாய மசோதா நகலை எரித்து சென்னையில் போராட்டம் : 100 பேர் கைது!

 

விவசாய மசோதா நகலை எரித்து சென்னையில் போராட்டம் : 100 பேர் கைது!

விவசாய மசோதாவை எதிர்த்து மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னையில் போராட்டம் நடத்தினர்.

விவசாய மசோதா நகலை எரித்து சென்னையில் போராட்டம் : 100 பேர் கைது!

விவசாய சட்டங்களுக்கு எதிராக திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பல்வேறு இயக்கங்களும் குரல் கொடுத்து வருகின்றன. அதன் எதிரொலியாக சென்னையில் இன்று போராட்டத்தை முன்னெடுத்தனர் மே 17 மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர். விவசாய மசோதாவுக்கு எதிராக முழக்கமிட்ட இவர்கள் விவசாய மசோதா நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட முயன்ற போராட்டகாரர்கள் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே வேளாண்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் மக்களவையில் நிறைவேறிய 3 மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திமுக, வரும் 28 ஆம் தேதி மாவட்ட, ஒன்றிய தலைநகரங்களில் தோழமை கட்சிளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.