தாம்பத்தியத்தின்போது எடுத்த 100 அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டிய 3வது கணவன்

 

தாம்பத்தியத்தின்போது எடுத்த 100 அந்தரங்க  வீடியோக்களை வைத்து மிரட்டிய  3வது கணவன்

மூன்றாவது மனைவி கொடுத்த புகாரின் பேரில் சென்னை தாம்பரத்தை சேர்ந்த சபீக் அகமதுவை கைது செய்திருக்கின்றார்கள் சைபர் கிரைம் போலீசார்.

தாம்பரம் சானடோரியத்தை சேர்ந்த சபீக் அகமது, மென்பொறியாளர். இரண்டு மனைவிகளும் பிரிந்து சென்றுவிட்டதால், திருமண இணையதளம் மூலமாக கடந்த 2019ம் ஆண்டில் ஐதராபாத்தை சேர்ந்த பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். அந்த பெண்ணுக்கும் சபீக் அகமது மூன்றாவது கணவர் என்று தகவல்.

தாம்பத்தியத்தின்போது எடுத்த 100 அந்தரங்க  வீடியோக்களை வைத்து மிரட்டிய  3வது கணவன்

திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்து வைப்பதை வழக்கமாக செய்து வந்துள்ளார். கணவன் தானே என்று அந்த பெண்ணும் மறுப்பு சொல்லாமல் இருந்து வந்திருக்கிறார். ஆனால், மனைவி கர்ப்பமானால் உல்லாசம் தடைபடும் என்று அவரை அடிக்கடி கருக்கலைப்பு செய்யச்சொன்னதால் ஆத்திரப்பட்ட அப்பெண், சண்டை போட்டுக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

எவ்வளவோ கெஞ்சிபார்த்தும் அப்பெண் வராததால், இதுவரைக்கும் எடுத்த 100 வீடியோக்களையும், நூற்றுக்கணக்கான அந்தரங்க போட்டோக்களையும் இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி வந்துள்ளார்.

தாம்பத்தியத்தின்போது எடுத்த 100 அந்தரங்க  வீடியோக்களை வைத்து மிரட்டிய  3வது கணவன்

இதையடுத்து அந்த பெண் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்ததை அடுத்து, சபீக் அகமதுவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

கணவனாக இருந்தாலும் தாம்பத்தியத்தின்போது வீடியோ மற்றூம் போட்டோ எடுக்க அனுமதித்தது தவறு என்று அப்பெண்ணுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.

மற்ற இரண்டு மனைவிகளையும் இதே மாதிரி வீடியோ, போட்டோக்கள் எடுத்த பிரச்சனையில்தான் பிரிந்து சென்றிருப்பார்கள் என்றும் போலீசார் கருதுகின்றனர்.