100 மாரத்தான்களில் பங்கேற்று சாதனை: முன்னாள் மேயருக்கு ஸ்டாலின் பாராட்டு

 

100 மாரத்தான்களில் பங்கேற்று சாதனை: முன்னாள் மேயருக்கு ஸ்டாலின் பாராட்டு

100 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ள சென்னை முன்னாள் மேயர் மா.சுப்ரமணியனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 

சென்னை: 100 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ள சென்னை முன்னாள் மேயர் மா.சுப்ரமணியனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 

சென்னை தெற்கு மாவட்ட திமுகவின் செயலாளராகவும், சைதாப்பேட்டை தொகுதியின் எம்.எல்.ஏ.வுமாக இருப்பவர் மா.சுப்ரமணியன். சென்னை மக்களிடையே மேயராக நன்கு அறிமுகமாகியிருக்கும் இவர், உடல்நலன் மீது அதிக அக்கறை கொண்டவர்.

ma su

கடந்த 20 ஆண்டுகளாக சர்க்கரை நோயாளியாக இருந்து வரும் இவருக்கு, கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற விபத்தில் கால் உடைந்துள்ளது. இருப்பினும் தனது விடா முயற்சியாலும், மன வலிமையாலும் 2014 பிப்ரவரி 9-ம் தேதி மாரத்தான் போட்டி ஓட தொடங்கிய இவர், இன்று தனது 100-வது மாரத்தானை ஓடி சாதனை செய்துள்ளார். 

இதனையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் அவரை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், அவருக்கு தன் வாழ்த்துகளை தெரிவித்ததோடு, பாராட்டி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதேபோல், மா.சுப்ரமணியனின் இந்த சாதனைக்கு பலரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.