“100 திருக்குறளை ஒப்புவித்தால் 20 வகை அசைவ விருந்து” : அசத்தல் அறிவிப்பு!

 

“100 திருக்குறளை ஒப்புவித்தால் 20 வகை அசைவ விருந்து” : அசத்தல் அறிவிப்பு!

வஞ்சிரம் மீன் உள்ளிட்ட 20 வகை அசைவ விருந்து இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதே போல் ஒரு இனத்தை அடையாளம் காண உதவுவது அல்லது ஒரு இனத்திற்கு அடையாளமாக இருப்பது தாய்மொழி தான். அப்படிப்பட்ட நம் தாய் மொழியான தமிழின் மற்றொரு சிறப்பு திருக்குறள்.

ttn

வள்ளுவனின் திருக்குறள் மனிதராக பிறந்த அனைவரும் கற்க  வேண்டிய ஒரு நூல். அதனால் தான் பாடங்கள்  தொடங்கி பேருந்துகள்  வரை  நம் நாட்டில் திருக்குறள் இடம்பெற்றிருப்பதைக் காணலாம். 

அந்த வகையில்  புதுவையில் உள்ள ஓட்டல் ஒன்று வினோத அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது, புதுவையில் தொடங்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு ஓட்டலின் உரிமையாளர் ஞானபானு,  100 திருக்குறளை ஒப்புவித்தால் பிரியாணி & காடை வறுவல், இறால் தொக்கு, வஞ்சிரம் மீன் உள்ளிட்ட 20 வகை அசைவ விருந்து இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

திருக்குறளைச் சிறப்பிக்கும் வகையிலும் அதை மக்கள் மத்தியில் எளிதில் கொண்டு செல்லும் நோக்குடனும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இதன் மூலம் அவரின் ஓட்டல் பெயரும் பிரபலமாகும்.