10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

 

10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

முதுகுளத்தூர் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வெங்கல குறிச்சி கிராமத்தில் கனி -பாக்கியம் என்பவரின் 10 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதே கிராமத்தை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் தர்மராஜா வயது (23) என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கீழகாவனூர் கிராமத்தை சேர்ந்த கனி என்பவருக்கும் பாக்கியம் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று அவர்களுக்கு 10 வயதில் ஒரு குழந்தை உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பாக்கியம் கணவர் கனி இறந்துவிட்டார். இதனால் கணவர் இல்லாமல் வாழ்க்கை நடத்த சிரமப்பட்ட பாக்கியம் முதுகுளத்தூர் அருகே உள்ள வெங்கலக்குறிச்சியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று பாக்கியம் என்பவரின் 10 வயது மகளை கீழகாவனூரில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். அங்கு அந்த சிறுமியின் சித்தப்பா அர்ஜுனன், வெங்கல குறிச்சி கிராமத்தை சேர்ந்த தர்மராஜாவை அண்ணன் மகளான 10 வயது சிறுமியை அவரது தாயார் இருக்கும் வெங்கலக்குறிச்சி கிராமத்திற்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அச்சிறுமியை அமரவைத்த தர்மராஜா, அத்துமீறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். தாயை பார்த்ததும் அந்த சிறுமி நடந்ததை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தாயார் தர்மராஜனிடம் இதுகுறித்து கேட்டதற்கு அவரது தாயை ஆபாசமாக திட்டியதோடு அல்லாமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் மனமுடைந்த சிறுமியின் தாயார் கீழத்தூவல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் தர்மராஜா மீது வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.