சிறுமியை விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை!

 

சிறுமியை விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை!

அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் வசித்து வந்தவர் நேரு (30). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். திருமண ஆசை வார்த்தை பேசி, அடிக்கடி தனிமையில் சந்தித்தும் வந்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை திருச்சிக்கு அழைத்துச் சென்றவர் விடுதி ஒன்றில் தங்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சிறுமியை விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை!

சிறுமியை காணாமல் பதறிய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில், தேடுதல் வேட்டையை தொடங்கிய போலீசாரை அவரைக் கைது செய்து சிறுமியையும் மீட்டுக் கொண்டு வந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த ஜெயங்கொண்டம் நீதிமன்றம், நேருவை பொது சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது.

சிறுமியை விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை!

இந்த நிலையில், இந்த வழக்கில் அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நேருவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.7 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரில் நேரு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.