திண்டுக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி!

 

திண்டுக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி!

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

திண்டுக்கல் மாவட்டம் ஜம்புலியம்பட்டி அடுத்த வன்னிய பாறைப்பட்டி கிராமத்தை சேர்ந்தர் வின்செண்ட். கூலி தொழிலாளி. இவரது மகன் யோகராஜ் (10), அங்குள்ள அரசுப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று யோகராஜ், தனது அம்மா மேரியுடன் தோட்டத்தில் உள்ள கிணற்றுக்கு துணி துவைப்பதற்காக சென்றான்.

திண்டுக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி!

மேரி துணிகளை துவைத்துக் கொண்டிருந்தபோது கிணற்றின் அருகே விளையாடி கொண்டிருந்த யோகராஜ், எதிர்பாராத விதமாக 100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தான். இதனை கண்டு, அதிர்ச்சியடைந்த மேரி அலறி துடிக்கவே, அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். ஆனால் கிணற்றில் 100 வரை தண்ணீர் இருந்ததால், அச்சமடைந்த அந்த பகுதி இளைஞர்கள், திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் அதிகளவு தண்ணீர் இருந்ததால் சிறுவனை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில், வீரர்கள் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.