அப்பாவின் வேட்டியால் பாத்ரூமில் தூக்கிட்டு 10 வயது சிறுவன் தற்கொலை

 

அப்பாவின் வேட்டியால் பாத்ரூமில் தூக்கிட்டு 10 வயது சிறுவன் தற்கொலை

அப்பாவின் வேட்டியால் 10 வயது சிறுவன் பாத்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அப்பாவின் வேட்டியால் பாத்ரூமில் தூக்கிட்டு 10 வயது சிறுவன் தற்கொலை

சென்னை ஐசிஎப் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சதீஷ். இவர் மனைவி ஜீவா. இத்தம்பதிக்கு கிருபா(13 ) என்ற மகளும், ரித்தீஷ்(10) என்ற மகனும் இருந்தனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கணவனையும், பிள்ளைகளையும் விட்டு பிரிந்து சென்றுவிட்டார் ஜீவா.

இதன்பின்னர் சதீஷ்தான் , தன் இரு பிள்ளைகளையும் வளர்த்து வந்திருக்கிறார்.

ஆட்டோ டிரைவரான சதீஷ், நேற்றைக்கு வழக்கம் போலவே ஆட்டோ ஓட்ட சென்றுவிட்டார். வீட்டில் பிள்ளைகள் இருவரும் டிவி பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது ரித்தீஷ், குளியல் அறைக்கு போவதாக அக்கா கிருபாவிடம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.

அப்பாவின் வேட்டியால் பாத்ரூமில் தூக்கிட்டு 10 வயது சிறுவன் தற்கொலை

வெகுநேரமாகியும் தம்பி வராததால் பாத்ரூம் கதவை தட்டியிருக்கிறார் கிருபா. எந்த சத்தமும் வராததால் பயந்துபோய், பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லி அழுதிருக்கிறார். அவர் வந்து கதவை உடைத்து பார்த்தபோது, குளியல் அறை ஜன்னலில் வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தகவல் அறிந்து வந்த சதீஷ், மகனின் உடலைப்பார்த்து கதறியுள்ளார். பின்னர் ஐசிஎப் போலீசார் வந்து ரித்தீஷ் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவனின் தற்கொலைக்கான காரணத்தை அறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.