பைக் மீது மோதி தீப்பிடித்து எரிந்த லாரி: 10 டன் ரேஷன் அரிசி எரிந்து சேதம்!

 

பைக் மீது மோதி தீப்பிடித்து எரிந்த லாரி: 10 டன் ரேஷன் அரிசி எரிந்து சேதம்!

திருப்பத்தூர் மாவட்டம், மாராபட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு 10 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றுக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அந்த லாரி எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் உயிர் பிழைத்த நிலையில், லாரியின் முன்பக்கத்தில் தீ பிடித்துள்ளது. அதன் பின்னர் தீ மளமளவென பரவியதில் லாரியில் இருந்த 10 டன் அரிசியும் எரிந்து நாசமாகியுள்ளது.

பைக் மீது மோதி தீப்பிடித்து எரிந்த லாரி: 10 டன் ரேஷன் அரிசி எரிந்து சேதம்!

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனிடையே லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், டிரைவர் தப்பி ஓடிவிட்டதால் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தி வரபட்டதா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.