மதுரை கொரோனா வார்டில் அடுத்தடுத்து 10 பேர் மரணம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

 

மதுரை கொரோனா வார்டில் அடுத்தடுத்து 10 பேர் மரணம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த போது, கொரோனா பரவல் குறைவாக இருந்தது. ஆனால் கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு மேல் ஊரடங்கு நீடித்ததால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. அதனை கருத்தில் கொண்ட அரசு, ஊரடங்கைக் கட்டுப்பாடுகளுடன் ஓரளவு தளர்த்தியது. அதனால் நாளொன்றுக்கு 400 முதல் 600 வரையிலேயே அதிகரித்து வந்த பாதிப்பு, பன்மடங்காக அதிகரித்தது.

மதுரை கொரோனா வார்டில் அடுத்தடுத்து 10 பேர் மரணம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

இதனையடுத்து கொரோனா அதிகமாகப் பரவியுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து கொரோனா அதிகரித்து வரும் மதுரை மற்றும் தேனியிலும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பினும் பாதிப்பு குறைந்ததாக இல்லை. இந்த நிலையில், மதுரையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 10 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.