ஐதராபாத்தில் வீடு இடிந்து 10 பேர் உயிரிழப்பு!
Oct 14, 2020, 09:00 IST1602646237000
கனமழையால் ஐதராபாத்தில் வீடு இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிந்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஓல்டு சிட்டி பகுதியில் வீடு இடிந்து ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பரிதாபமாக
உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையை கடந்த நிலையில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக ஐதராபாத்தில் கனமழை கொட்டி தீர்த்தது.
இதில் சாலை முழுவதும் வெள்ளநீர் கரை புரண்டு ஓடியது. ஐதராபாத்தில் மட்டும் 2 செமீ மழை கொட்டியது. இதில் பண்ட்லகுடா, வசந்தாலிபுரம், தம்மைகுடா, முஷீராபாத், டாலி சௌக்கி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் புகுந்தது குறிப்பிடத்தக்கது.