கல்பாக்கம் அணுமின் நிலைய குடியிருப்பு பகுதியில் 15 பேருக்கு கொரோனா – 10 நாட்கள் முழு முடக்கம் அறிவிப்பு

 

கல்பாக்கம் அணுமின் நிலைய குடியிருப்பு பகுதியில் 15 பேருக்கு கொரோனா – 10 நாட்கள் முழு முடக்கம் அறிவிப்பு

சென்னை: கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் 10 நாட்களுக்கு முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இதுவரை 74,622 பேருக்கு கொரோனா பாதிப்பு தமிழத்தில் ஏற்பட்டுள்ளது. அதில் 41,357 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டனர். மேலும் இதுவரை தமிழகத்தில் கொரோனா காரணமாக 957 பேர் இறந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையை அடுத்துள்ள கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு பகுதியில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு 10 நாட்களுக்கு முழு முடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.