10, 11, 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

 

10, 11, 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

24-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான முடிவுகள்  தேர்வு  முடிவுகள் ஏப்ரல் மாதம் 24ம் தேதி வெளியாகிறது. 

தமிழகத்தில்  10, 11,12ஆம் வகுப்புகளின்  பொதுத் தேர்வுகளின்  முடிவுகள்  எப்போது வெளியாகும் என்று பள்ளிக் கல்வித் துறை  அறிவித்துள்ளது. 

ttn

தமிழகத்தில்  10, 11,12ஆம் வகுப்புகளின்  பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணையும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், 2019 ஆண்டிற்கான பொதுத்தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுத் தேர்வுகளின்  முடிவுகள்  குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ’10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.45 லட்சம் மாணவர்களும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.26 லட்சம் மாணவர்களும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.16 லட்சம் மாணவர்களும் எழுதவுள்ளனர்.  இதில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு வருகிற 2-ந்தேதி தொடங்கி, 24-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான முடிவுகள்  தேர்வு  முடிவுகள் ஏப்ரல் மாதம் 24ம் தேதி வெளியாகிறது. 

ttn

அதேபோல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 27ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 13ம் தேதி நிறைவடைகிறது. இதற்கான தேர்வு முடிவுகள் மே 4ம் தேதி வெளியாகிறது. மேலும் 11ஆம் வகுப்பு  பொதுத் தேர்வுகள், மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி  முடிகிறது. இதற்கான  மே 14ம் தேதி வெளியாகிறது’ என அறிவிக்கப்பட்டுள்ளது.