10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை  செய்த கொடூரன் கைது!

 

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை  செய்த கொடூரன் கைது!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே 5 வது வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசாமி கைது செய்யப்பட்டார். 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே 5 வது வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசாமி கைது செய்யப்பட்டார். 

எஸ்.கோவில்பட்டியை சேர்ந்த 10 வயது சிறுமியை அதேப் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் தனது வீட்டுக்கு அழைத்து சென்று வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். உடனே அந்த சிறுமி சத்தம்போடவே அப்பகுதியினர் குமார் வீட்டின் முன் குவிந்தனர். இதையறிந்த குமார் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். உடனடியாக சிறுமியை மீட்ட அக்கம்பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சிறுமியிடன் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், குமார் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தது தெரியவந்தது.  சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் எஸ்.வி.மங்கலம் போலீசார் கைது செய்தனர்.