10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி

 

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி

சென்னை வேப்பேரி பகுதியில் வசித்து வரக்கூடியவர் மோகன்(64). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். மோகன் காவலாளியாக பணிபுரிந்து வரக்கூடிய குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்த நபருடன் பழக்கம் ஏற்பட்டது. அவருக்கு 10 வயது மகள் மற்றும் 3 வயதில் மகன் உள்ளனர்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அந்த நபர் வேப்பேரியில் சொந்தமாக வீடு வாங்கி சென்றார். மோகன் அந்த நபரின் வீட்டில் தங்கி, கடந்த ஒரு மாதமாக சிறு சிறு வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று மோகன் மற்றும் அவரது மனைவி வேலைக்கு செல்ல தயாராகிக்கொண்டிருந்த போது, அந்த சிறுமி தனியாக தன்னை விட்டு செல்ல வேண்டாமெனவும், தனக்கு உடம்பு வலிப்பதாக கூறி தாயிடம் அழுதுள்ளார்.

இது குறித்து சிறுமியிடம் விசாரித்த போது வீட்டில் தனியாக இருந்த போது தன்னிடம் பல முறை மோகன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக சிறுமியின் பெற்றோர் வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது நிரூபணமாகியது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.