10 மாதங்கள் வீட்டு வாடகை பாக்கி… இயக்குநர் பி. வாசு பரபரப்பு புகார்!
இவருக்கு கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் இரண்டு தளங்கள் கொண்ட வீடு ஒன்று உள்ளது.
சென்னை கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் வசித்து வருபவர் பிரபல இயக்குநர் பி. வாசு. இவருக்கு கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் இரண்டு தளங்கள் கொண்ட வீடு ஒன்று உள்ளது. இதை பி. வாசு கடந்த ஆண்டு ஜானகி என்பவருக்கு மாதம் ரூ. 75 ஆயிரத்திற்கு வாடகைக்கு விட்டிருந்தார். ஆனால் ஜானகி கடந்த 10 மாதங்களாக வீடு வாடகையைக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஜானகியை பி. வாசு வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால் அதை மறுத்த ஜானகி வாசுவுடன் தகராறு செய்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து இயக்குநர் பி. வாசு கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் செந்தில் வீட்டை அபகரிக்க முயன்ற புரொடக்சன் மேனேஜர் கைது செய்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.