10 தொகுதிகள் போதுமா? தமிழிசையை கிண்டல் செய்த திருநாவுக்கரசர்

 

10 தொகுதிகள் போதுமா? தமிழிசையை கிண்டல் செய்த திருநாவுக்கரசர்

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 10 தொகுதிகளைக் கைப்பற்றுவோம் என கூறிய தமிழிசையை திருநாவுக்கரசர் கிண்டல் செய்துள்ளார். 

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 10 தொகுதிகளைக் கைப்பற்றுவோம் என கூறிய தமிழிசையை திருநாவுக்கரசர் கிண்டல் செய்துள்ளார். 

மதுரையில் நடைபெற்ற எய்ம்ஸ் அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அதன்பின் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை, நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி தமிழகத்தில் 10 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், மீண்டும் மோடி தான் நாட்டின் பிரதமர் என்றும் பேசினார்.

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர், நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 10 தொகுதிகளைக் கைப்பற்றுவோம் எனக் கூறும் தமிழிசை, மீதமுள்ள 29 தொகுதிகளை காங்கிரஸ், திமுகவுக்கு கொடுக்கிறாரா? என கேள்வி எழுப்பினார்.

மேலும், தமிழகத்தில் 10 மக்களவை தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும் என யதார்த்தத்தை மீறி தமிழிசை சவுந்தரராஜன் பேசி இருப்பதாகவும், 29 தொகுதிகளில் காங்கிரஸ் திமுக கூட்டணி வெற்றி பெறும் என யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு பேசியதற்கும் நன்றி தெரிவிப்பதாக திருநாவுக்கரசர் கூறினார்.