10ம் வகுப்பு தேர்வு நடத்துவது விபரீதத்தில் முடியும்! – டி.டி.வி.தினகரன் எச்சரிக்கை
ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படாத நிலையில் 10ம் வகுப்பு தேர்வு நடத்துவது வீன் விபரீதங்களை ஏற்படுத்திவிடக் கூடும் என்று டி.டி.வி.தினகரன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படாத நிலையில் 10ம் வகுப்பு தேர்வு நடத்துவது வீன் விபரீதங்களை ஏற்படுத்திவிடக் கூடும் என்று டி.டி.வி.தினகரன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று (மே 18) வெளியிட்டுள்ள ட்வீட்களில், “லட்சக்கணக்கான மாணவச்செல்வங்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை ஊழியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோரின் நலன் கருதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு தள்ளி வைக்க வேண்டும்.
லட்சக்கணக்கான மாணவச்செல்வங்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை ஊழியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோரின் நலன் கருதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு தள்ளி வைக்க வேண்டும். 1/2 @CMOTamilNadu
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 18, 2020
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று ஆபத்து இன்னும் குறையாததால், 12 மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படவில்லை. இச்சூழலில் பத்தாம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது தேவையற்ற விபரீதத்தில் முடிந்துவிடும் என்பதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று ஆபத்து இன்னும் குறையாததால், 12 மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படவில்லை. இச்சூழலில் பத்தாம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது தேவையற்ற விபரீதத்தில் முடிந்துவிடும் என்பதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும். 2/2 #10thexampostpone
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 18, 2020