செல்போன் மாயமானதால் விரக்தி… +1 மாணவர் தூக்கிட்டு தற்கொலை…

 

செல்போன் மாயமானதால் விரக்தி… +1 மாணவர் தூக்கிட்டு தற்கொலை…

அரியலூர்

அரியலூர் அருகே செல்போன் காணாமல் போன வேதனையில் பிளஸ் 1 மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த செம்பியக்குடியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் நிஷாந்த் (15). இவர் இலந்தைகூடம் அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். நிஷாந்த் செல்போனில் அடிக்கடி கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற நிஷாந்த், இலந்தைகூடத்தில் உள்ள நண்பரின் வீட்டில் அமர்ந்து கேம் விளையாடி உள்ளார்.

செல்போன் மாயமானதால் விரக்தி… +1 மாணவர் தூக்கிட்டு தற்கொலை…

பின்னர், செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு வெளியே சென்ற அவர் திரும்பி வந்துபோது செல்போன் மாயமானதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிஷாந்த், பெற்றோரிடம் எப்படி தெரிவிப்பது என வேதனை அடைந்துள்ளார். இதனால் வீட்டிற்கு சென்ற அவர், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று மீட்டு, லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அனுமதித்த சிறிது நேரத்திலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்த வெங்கனூர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர.