செல்போன் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால், பிளஸ் 1 மாணவர் தற்கொலை!

 

செல்போன் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால், பிளஸ் 1 மாணவர் தற்கொலை!

திருச்சி

திருச்சி அருகே செல்போனில் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் பிளஸ் 1 மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அடுத்த சந்தாபுரத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் திருச்சி பருப்புகார தெருவில் இனிப்புக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் பாலஹரிநாத் (16). இவர் காட்டூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளி திறக்காத நிலையில், வீட்டில் இருந்தே ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வந்துள்ளார்.

இந்த நிலையில், அவர் செல்போனில் பப்ஜி விளையாட்டை டவுன்லோட் செய்து விளையாடி வந்துள்ளார். இதனால் படிப்பில் சரிவர கவனம் செலுத்தாததால் சமீபத்தில் நடந்து முடிந்த ஆன்லைன் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும், படிப்பதற்காக கொடுக்கப்பட்ட 5 ஜிபி நெட்-ஐ ஒரே நாளில் விளையாடி காலி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை சங்கர், அவரை கடுமையாக திட்டி உள்ளார்.

செல்போன் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால், பிளஸ் 1 மாணவர் தற்கொலை!

இதனால் மனமுடைந்த பாலஹரிநாத், தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் அவரது அக்கா கதவை தட்டி அழைத்துள்ளார். அவர் பதில் அளிக்காததால், கதவை உடைத்துச்சென்று பார்த்தபோது, பால ஹரிநாத் தூக்கில் சடலமாக தொங்கினார். இதனை கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

தகவலின் பேரில், சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சங்கர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.