“தாய் பெற்றார் ,தந்தை விற்றார்” -பணத்துக்கு ஆசைப்பட்ட ஒரு அப்பா செஞ்ச தப்பான வேலை

 

“தாய் பெற்றார் ,தந்தை விற்றார்” -பணத்துக்கு ஆசைப்பட்ட ஒரு அப்பா செஞ்ச தப்பான வேலை

ஒரு தாய் பெற்றெடுத்த குழந்தையை அவரின் கணவர் ஒருவரிடம் 70000 ரூபாய்க்கு விட்டதால் கைது செய்யப்பட்டார் .

ஹைதராபாத்தில் நடைபாதையில் வசிக்கும் ஒரு தம்பதியினர்  நீண்ட நாட்களாக குழந்தையில்லாமல் அவதிப்பட்டார்கள் .அதன் பிறகு நீண்ட பிரார்த்தனைக்கு பிறகு அந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை கடந்த மாதம் பிறந்தது .அதன் பிறகு அந்த தாய் அந்த குழந்தையை செல்லமாக கொஞ்சி, ஆசையாக பாலூட்டி வளர்த்தார் .அவர்கள் வாழ்ந்து வந்தது சாலையோரம் என்றாலும், குளிரும் வெய்யிலும் குழந்தையை தாக்காமல் அந்த தாய் அந்த குழந்தையை பாதுகாத்து வளர்த்தார் .

இந்நிலையில் அந்த குழந்தை காணாமல் போனது .அப்போது அந்த தாய் துடியாய் துடித்தார் .ஆனால் அந்த தந்தை எந்த பதற்றமும் இல்லாமல் இருந்தார் .அதனால் மிகவும் கவலைப்பட்ட அந்த தாய் அருகிலுள்ள காவல் நிலயத்தில் தன்னுடைய ஒரு மாத ஆண் குழந்தையை காணவில்லை என்று புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமெரா காட்சிகளை ஆராய்ந்து பார்த்தார்கள் .அப்போது அந்த குழந்தையின் தந்தை அந்த குழந்தையை யாரிடமோ கொடுக்கும் காட்சி பதிவாகியிருந்தது .அந்த  காட்சியை கொண்டு அந்த தந்தையை பிடித்து போலீசார் விசாரித்தார்கள் .அப்போது அந்த தந்தை தான் குழந்தையை ஒருவரிடம் 70000 ரூபாய்க்கு விற்றதை கூறினார் .பின்னர் போலீசார் அந்த தந்தையின் மூலம் குழந்தையை வாங்கிய நபரை அடையாளம் கண்டு பிடித்தார்கள் .அதன் பிறகு அவர்கள் அந்த நபரிடமிருந்து குழந்தையை மீட்டு ,குழந்தையை சைல்ட் பாதுகாப்பு மையத்தில் சேர்த்துள்ளார்கள் .இப்போது போலீசார் அந்த தந்தையின்மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்  .

“தாய் பெற்றார் ,தந்தை விற்றார்” -பணத்துக்கு ஆசைப்பட்ட ஒரு அப்பா செஞ்ச தப்பான வேலை