“சிக்னலில் சில்மிஷம் செய்றான்” பிச்சைக்காரி ரூபத்தில் பட்ட பகலில் மிரட்டி கொள்ளையடிக்கும் பெண்கள்.

 

“சிக்னலில் சில்மிஷம் செய்றான்” பிச்சைக்காரி ரூபத்தில் பட்ட பகலில் மிரட்டி கொள்ளையடிக்கும் பெண்கள்.


நகரின் போக்குவரத்து நெரிசலில் காரில் போவோரை மடக்கி, கொள்ளையடிக்கும் பெண்கள் கூட்டத்தை போலீசார் கைது செய்தார்கள்.

“சிக்னலில் சில்மிஷம் செய்றான்” பிச்சைக்காரி ரூபத்தில் பட்ட பகலில் மிரட்டி கொள்ளையடிக்கும் பெண்கள்.


தெற்கு டெல்லியின் ஹவுஸ் காஸில் பகுதியில் ஒரு 64 வயதான பெண் அக்டோபர் 30ம் தேதியன்று காரில் சென்று கொண்டிருந்தார் .அப்போது அந்த கார் ஒரு சிக்னல் அருகே நின்றது .உடனே நான்கு பெண்கள் அந்த காரிலிருந்து பெண்ணை சூழ்ந்துகொண்டார்கள் .அதன் பின்னர் அந்த பெண்கள் அவரிடம் பிச்சை கேட்பது போல் நின்றார்கள் .அதனால் அந்த பெண் முதலில் 5 ரூபாய் தர்மம் செய்தார் .அதற்கு அந்த கூட்டம் அதை வாங்க மறுத்தது .உடனே அந்த மூதாட்டி பர்ஸிலிருந்து 50 ரூபாய் கொடுக்க போனார் .அப்போது அந்த கூட்டம் அந்த பர்சில் நிறைய பணமிருப்பததை பார்த்ததும் அதிலிருந்த 500 ரூபாய் தாள்களை பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டது .அதனால் அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்து போனார் .
ஆனால் அந்த போக்குவரத்து மிகுந்த சிக்னலில் அந்த பெண்கள் கூட்டத்தினை பிடிக்க முடியாமல் அவர் திணறினார் .உடனே அவர் அங்குள்ள காவல் நிலையத்தில் போய் அந்த பெண்கள் மீது புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை பிடித்து அவர்களின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் . இப்போது அவர்களை பற்றி பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது .அதன் படி அவர்கள் ஒரு கூட்டமாக செயல்படுவதாகவும் ,இப்படி சிக்னலில் சிக்கும் பல பணக்கார ஆண்களை பாலியல் தொல்லை கொடுப்பதாக மிரட்டி பணம் பறிப்பார்களாம் . .பெண்களாயிருந்தால் பணத்தை பறித்துக்கொண்டு ஓடிவிடுவார்களாம் .அவர்களிடம் உஷாராக இருக்கும்படி பொதுமக்களை சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டார்கள் .

“சிக்னலில் சில்மிஷம் செய்றான்” பிச்சைக்காரி ரூபத்தில் பட்ட பகலில் மிரட்டி கொள்ளையடிக்கும் பெண்கள்.