திருவண்ணாமலையில் காரில் உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.1.96 லட்சம் பறிமுதல்!

 

திருவண்ணாமலையில் காரில் உரிய ஆவணமின்றி  எடுத்துச்சென்ற ரூ.1.96 லட்சம் பறிமுதல்!

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச்சென்ற 1.96 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே, நேற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் திருவண்ணாமலை பெருமாள் நகரைச் சேர்ந்த கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் கார்த்திகேயன் என்பவர், காரில் உரிய ஆவணங்களின்றி சுமார் 1 லட்சத்து 96 ரூபாய் பணம் எடுத்துச்சென்றது தெரியவந்தது.

திருவண்ணாமலையில் காரில் உரிய ஆவணமின்றி  எடுத்துச்சென்ற ரூ.1.96 லட்சம் பறிமுதல்!

இதனை அடுத்து, பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை மாவட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேசன் முன்னிலையில் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் திருவண்ணாமலை சார் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.