தூத்துக்குடியில் உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.1.68 லட்சம் பறிமுதல்

 

தூத்துக்குடியில் உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.1.68 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி

தூத்துக்குடியில் உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட 1 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று தூத்துக்குடி மூன்றாவது மயில் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை மேற்கொண்டனர்.

தூத்துக்குடியில் உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.1.68 லட்சம் பறிமுதல்

அப்போது வாகனத்தில் 1 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பணத்தை எடுத்து வந்த நபரிடம் விசாரித்தபோது, பணத்திற்கு உரிய ஆணவங்கள் இல்லாதது தெரிய வந்தது. இதனை அடுத்து, அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு பணத்தை பெற்றுச் செல்ல அறிவுறுத்தினர்.

தொடர்ந்து, பறிமுதலான பணத்தை தூத்துக்குடி வட்டாட்சியர் முன்னிலையில் மாவட்ட கரூவூலத்தில் ஒப்படைத்தனர்.