சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில், ஒன்றரை வயது குழந்தை பலி!

 

சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில், ஒன்றரை வயது குழந்தை பலி!

தஞ்சை

தஞ்சை அருகே கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒன்றரை வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த கோப்பனம்பாளையத்தை சேர்ந்தவர் விவேக் (31). இவர் கோயில்களில் சிலை செய்யும் பணி செய்து வருகிறார். இவருக்கு தீபிகா என்ற மனைவியும், ஒன்றரை வயது குழந்தை உள்பட 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில், விவேக், தனது குடும்பத்தினருடன் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சுவாமி மலை முருகன் கோயிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில், ஒன்றரை வயது குழந்தை பலி!

காரை, அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் ஓட்டிச் சென்றார். இன்று காலை தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பிரிவு சாலை அருகே சென்றபோது, தீடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பெயர் பலகையின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், விவேக்கின் ஒன்றரை வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து செங்கிப்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.