நள்ளிரவில் டாஸ்மாக் பார் கல்லாவை உடைத்து கொள்ளை முயற்சி- போதை இளைஞர் கைது

 

நள்ளிரவில் டாஸ்மாக் பார் கல்லாவை உடைத்து கொள்ளை முயற்சி- போதை இளைஞர் கைது

சென்னை

மதுரவாயலில் டாஸ்மாக் பாரில் நள்ளிரவில் புகுந்து ரூ.1.5 லட்சம் பணத்தை திருட முயன்ற இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். சென்னை மதுரவாயல் ஏரிக்கரையில் உள்ள டாஸ்மாக் கடையில், அய்யனார் என்பவர் பார் நடத்தி வருகிறார். அவர் நேற்றிரவு விற்பனையை முடித்து விட்டு வியாபார பணமான 1 லட்சத்து 15 ஆயிரத்தை கல்லாவில் வைத்து பூட்டிவிட்டு, உறங்க சென்றுள்ளனர். இந்த நிலையில், நள்ளிரவில் பாருக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் கல்லாவை உடைத்து பணத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பியோட முயன்றார்.

நள்ளிரவில் டாஸ்மாக் பார் கல்லாவை உடைத்து கொள்ளை முயற்சி- போதை இளைஞர் கைது

அப்போது, அருகாமையில் இருந்தவர்கள் திருடனை மடக்கிப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் மதுரவாயலை சேர்ந்த பாலன்(24) என்பது தெரியவந்தது. மேலும், மதுபோதையில் இருந்த பாலன் குடிக்க பணம் இல்லாததால், பார் கல்லாவை நோட்டமிட்டு நள்ளிரவில் பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதனை அடுத்து அவர் மீது வழக்குப்பதிந்து போலீசார் கைதுசெய்தனர்.