கொரோனாவால் இதுவரை 1.05 லட்சம் பேர் மரணம்!

 

கொரோனாவால் இதுவரை 1.05 லட்சம் பேர் மரணம்!

இந்தயாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வரும் சூழலில், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதே போல, அந்தந்த மாநில அரசுகளும் மக்களை பாதுகாக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கொரோனாவால் இதுவரை 1.05 லட்சம் பேர் மரணம்!

அதில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 78,524 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 68.35 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் ஒரே நாளில் 971 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1.05 லட்சம் ஆக அதிகரித்திருப்பதாகவும் கொரோனாவில் இருந்து 58.27 பேர் குணமடைந்த நிலையில் 9.02 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.54% ஆக குறைந்துள்ளதாகவும் குணமடைந்தோர் விகிதம் 85.25% ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.