ஶ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1.02 கோடி வசூல்

 

ஶ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1.02 கோடி வசூல்

திருச்சி

திருச்சி ஶ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் 1 கோடியே 2 லட்சம் ரூபாய் பணம், 179 கிராம் தங்கம் மற்றும் 849 கிராம் வெள்ளிப்பொருட்கள் வசூலானது.

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாக திருச்சி ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயம் விளங்கி வருகிறது. இந்த கோயிலில் உள்ள உண்டியல்கள் மாதம்தோறும் திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணுவது வழக்கம். அதன்படி, நேற்று கோயில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

ஶ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1.02 கோடி வசூல்

கருட மண்டபத்தில் நடந்த இந்த பணியில் கோயில் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில், டிசம்பர் மாத உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 2 லட்சத்து 25 ஆயிரத்து 578 ரூபாய் ரொக்கப்பணம் வசூலானது. மேலும், 179 தங்க தங்க மற்றும் 840 கிராம் வெள்ளி பொருட்களும், ஏராளமான வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக கிடைப்பெற்று உள்ளது.