1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி! பள்ளிக்கல்வித்துறை அதிரடி

 

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி! பள்ளிக்கல்வித்துறை அதிரடி

கொரோனா  வைரஸ்  தொற்று  உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை 223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா  வைரஸ்  தொற்று  உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை 223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் டெல்லி, கேரளா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது.  ஆனாலும்  திட்டமிட்டபடி 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா அச்சத்தால் சிபிஎஸ்சி தேர்வுகள் அனைத்தும் மார்ச் 31ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. 

ttn

இந்நிலையில் தமிழகத்திலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முன்னதாக உத்திரபிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் என அறிவித்தது குறிப்பிடதக்கது.