“1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி” : புதுச்சேரி அரசு அறிவிப்பு!

 

“1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி” : புதுச்சேரி அரசு அறிவிப்பு!

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை அளிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று  புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

ttn

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும் அதை தடுக்கும் விதமாக  நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  அதன்படி புதுச்சேரியிலும் மக்கள் ஊரடங்கை கடைபிடித்து வருகின்றனர். புதுச்சேரி மக்கள் அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை அளிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

ttn

இந்நிலையில் புதுவை கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும்  தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக  அறிவித்துள்ளது.