1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா?

 

1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா?

அஸ்ஸாம் மாநிலம் பக்சா மாவட்டம் குமரிகட்டா என்ற கிராமத்தில் நடக்கும் ஞாயிற்றுக்கிழமை சந்தையில் எலிக்கறி விற்பனை வெகு ஜோராக நடக்கிறது

அஸ்ஸாம் மாநிலம் பக்சா மாவட்டம் குமரிகட்டா என்ற கிராமத்தில் நடக்கும் ஞாயிற்றுக்கிழமை சந்தையில் எலிக்கறி விற்பனை வெகு ஜோராக நடக்கிறது.

குமரிக்கட்டா சந்தையில் கோழிக்கறி, பன்றிக்கறி விட எலிக்கறிக்கு அதிக மவுசு. எலின்னா நம்ம ஊருக்குப்பக்கமா தெரியுமே, அந்த மாதிரி நெனச்சுறாதீங்க. அஸ்ஸாம் கிராமப்புற வயல்களில் பயிர்களை தின்று கொழுத்து முயல் சைஸுக்கு இருக்கும். இதனால் இந்த எலிகளின் மாமிசம் சுவையாக இருக்குமென்று சாப்பாட்டுப் பிரியர்கள் ஜொள்ளு வடிய கூறுகின்றனர்.

நெல் வயல்களில் பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை விவசாயிகள் பொறி வைத்து பிடிக்கிறார்கள். இந்த எலிகளை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கி வாரச்சந்தையில் விற்பனை செய்கிறார்கள்.

புதிதாக பிடிக்கப்பட்ட எலிகளுடன் தோல் உரிக்கப்பட்ட எலிக்கறி, வேக வைக்கப்பட்ட எலிக்கறி விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிலோ எலிக்கறி ரூ.200க்கு விறக்கப்படுகிறது.

பழங்குடி மக்களுக்கு எலிகள் நல்ல வருமானம் தரும் தொழிலாகவே மாறிவிட்டது. தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் அவர்கள் குளிர் காலத்தில் வேலை இல்லாதபோது எலிகளைப் பிடித்து விற்று வருமானம் தேடிக் கொள்கிறார்கள்.

இதுபற்றி ஒரு விவசாயி கூறியதாவது:

கடந்த சில ஆண்டுகளாக வயல்வெளிகளில் எலிகள் அதிகமாகி வருகின்றன. அவை பயிர்களை நாசம் செய்வதால் பொறி வைத்து பிடிக்கிறோம். பின்னர் வியாபாரிகளிடம் விற்று விடுகிறோம். இதனால் பயிர் இழப்பை ஓரளவுக்கு ஈடுசெய்ய முடிகிறது என்றார்.