80 வயது பாட்டியின் கையை உடைத்த இருவர் கைது

 

80 வயது பாட்டியின் கையை உடைத்த இருவர் கைது

மீஞ்சூர் அருகே மூதாட்டியை தாக்கி கையை முறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மீஞ்சூர் அருகே மூதாட்டியை தாக்கி கையை முறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை:

மீஞ்சூரை அடுத்த வல்லூர் நந்தனார் தெருவைச் சேர்ந்தவர் அன்னம்மாள் (80). இவர் வீட்டு முன்பு இரவு தூங்கி கொண்டிருந்தார். அதிகாலையில் 2 இளைஞர்கள் அன்னம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினர். இதில் அந்த பாட்டியின் கை முறிந்தது. அவருக்கு திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல்லைச் சேர்ந்த ராமநாதன், மீஞ்சூரை அடுத்த வல்லூரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரை கைது செய்தனர்.