2 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த காமுக பள்ளி தலைமை ஆசிரியர்

 

2 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த காமுக பள்ளி தலைமை ஆசிரியர்

2 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரின் பேரில் 42 வயதான பள்ளித் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்

ஹைதராபாத்: 2 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரின் பேரில் 42 வயதான பள்ளித் தலைமை ஆசிரியர்  கைது செய்யப்பட்டுள்ளார். 

கிருஷ்ணா மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை கடந்த 22 ஆம் தேதி பள்ளியில் காலியாக இருந்த அறைக்குள் அழைத்துச் சென்று தலைமை ஆசிரியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியின் உடையில் ரத்தக்கறைகள் இருந்ததுடன், வலி தாங்க முடியாமல் அழுதுள்ளாள். பெற்றோர் விசாரித்தபோது அந்தச் சிறுமி நடந்ததைக் கூறியுள்ளார். தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்த மிருகம் நிகழ்த்திய அத்துமீறல் இதன்மூலம் தெரியவந்தது. இந்நிலையில் சிகிச்சைக்காக அந்தச் சிறுமியை மரு்ததுவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர்.
பிறப்புறுப்பில் நான்கு தையல்கள் போட்ட பிறகே சிறுமிக்கு ரத்தக்கசிவு நின்றதாகக் கூறப்படுகிறது. இதன் பிறகும், சமூக விளைவுகளுக்கு அஞ்சி பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர்.

தகவல் அறிந்த சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் அந்த பெற்றோருக்கு தைரியம் அளித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் செய்துள்ளனர். இதையடுத்து அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்த அந்த மிருகம் கைது செய்யப்பட்டுள்ளான்.