மதுரையில் ஒரு லட்சம் ரூபாய்க்காக 81 வயது மூதாட்டி படுகொலை

 

மதுரையில் ஒரு லட்சம் ரூபாய்க்காக 81 வயது மூதாட்டி படுகொலை

செல்லூர் பகுதியில் ஒரு லட்சம் ரூபாய்க்காக 81 வயது மூதாட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மதுரை: செல்லூர் பகுதியில் ஒரு லட்சம் ரூபாய்க்காக 81 வயது மூதாட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மதுரை செல்லூர் பகுதியில் உள்ள கட்டபொம்மன் நகரில் வசித்து வருபவர் ஆண்டாள்(81 ). இவருடைய கணவர் ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்று இயற்கை மரணம் அடைந்துள்ளார், ஆண்டாளுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இருவர் சென்னையிலும் ஒருவர் மதுரையிலும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்,

செல்லூர் பகுதியில் உள்ள சொந்த வீட்டில் ஆண்டாள் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் அவர் ஒரு லட்ச ரூபாய் வைத்திருந்ததை அறிந்த அடையாளம் தெரியாத நபர்கள் யாரோ ஒருவர் மூதாட்டியை கொலை செய்துவிட்டு பணத்தை திருடிச்  சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது. உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு பணிக்கு அனுப்பி வைத்த கால்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.