“ஹோலியன்னைக்கு ஜாலியா இருக்கலாம் வா “-வன்கொடுமை செய்யப்பட்ட டீனேஜ் பெண்.. 

 

“ஹோலியன்னைக்கு ஜாலியா இருக்கலாம் வா “-வன்கொடுமை செய்யப்பட்ட டீனேஜ் பெண்.. 

ஹோலி பண்டிகையன்று ஒரு, டீனேஜ் பெண் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார், அன்று இரவு ஒரு வெறி பிடித்தவர் அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். காலையில், அந்த பெண்ணின் தந்தை காவல் நிலையம் சென்று புகாரளித்தார்.

உத்தரபிரதேசத்தின் காசிப்பூர் மாவட்டத்தின் கமர் தானன் பகுதியின் கீழ் உள்ள கஹமர் கிராமத்தில் ஹோலி பண்டிகையன்று ஒருவாலிபர்   ஒரு பெண்ணை கொடுமைப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

ஹோலி பண்டிகையன்று ஒரு, டீனேஜ் பெண் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார், அன்று இரவு ஒரு வெறி பிடித்தவர் அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். காலையில், அந்த பெண்ணின் தந்தை காவல் நிலையம் சென்று புகாரளித்தார். ஆனால் அந்த காவல் நிலையத்தில் இருந்த கான்ஸ்டபிள்கள் ஹோலி பண்டிகை நடப்பதால் அமைதியாக இருங்கள் ,நாளை விசாரிக்கிறோம் என்று கூறியுள்ளார்கள். இதனால் அன்று மாலை அந்த பெண்ணின் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து போராடினார்கள். 

கிடைத்த தகவல்களின்படி, பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரை போலீஸ் சூப்பிரடெண்ட் ஓம்பிரகாஷ் சிங்கிடம் வியாழக்கிழமை சமர்ப்பித்துள்ளார். போலீஸ் சூப்பிரண்டு உடனடியாக வழக்குப் பதிவு செய்து, கஹ்மர் காவல் நிலையத்திற்கு இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட பெண்போலீசாருடன் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டார். இப்போது, இந்த வழக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.