ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார் – காதலியை கொன்றார் -கேஷியரிடம் பணத்துக்கு பதில் பிணத்தை விட்டுச்சென்றார்
ஹத்ராஸ் (உத்தரப்பிரதேசம்): உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் உள்ள உணவகத்தில் 20 வயது பி.காம் இரண்டாம் ஆண்டு மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அந்த பெண்ணின் சடலம் செவ்வாய்க்கிழமை ஹோட்டலில் கண்டுபிடிக்கப்பட்டது. தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்பிய தாய்மாமாவால் அந்த பெண் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம்.
ஹத்ராஸ் (உத்தரப்பிரதேசம்): உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் உள்ள உணவகத்தில் 20 வயது பி.காம் இரண்டாம் ஆண்டு மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அந்த பெண்ணின் சடலம் செவ்வாய்க்கிழமை ஹோட்டலில் கண்டுபிடிக்கப்பட்டது. தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்பிய தாய்மாமாவால் அந்த பெண் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம்.
போலிஸின் கூற்றுப்படி, உணவகத்தின் பணியாளர் ,கேஷியருக்கருகில் சோபாவில் அந்த பெண்ணின் பிணம் கிடப்பதைக் கண்டறிந்து சத்தம் போட்ட பிறகு போலிசார் வரவழைக்கப்பட்டனர்.
உணவக ஊழியர்களின் கூற்றுப்படி, இறந்த பெண் ஒரு இளைஞருடன் சாப்பிட வந்திருந்தார், அதன்பிறகு இருவரும் சாப்பிட்டுவிட்டு அவர் அந்த பெண்ணை கொலைசெய்துவிட்டு பிணத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பிஓடிவிட்டார் என்றார் .போலீஸ் விசாரணையில் அவர் அந்த பெண்ணின் தாய்மாமா என்றும் கட்டிக்க அந்த பெண் மறுத்ததால் அவர் கொலை செய்திருக்கிறாரென்றும் கூறினார் .பிறகு அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்
பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரிவு 302 (கொலை) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.