ஹோட்டலுக்குள் அத்துமீறி நுழைந்து, உரிமையாளரை அடித்து துவைத்த எஸ்.ஐ..!?

 

ஹோட்டலுக்குள் அத்துமீறி நுழைந்து, உரிமையாளரை அடித்து துவைத்த எஸ்.ஐ..!?

சோஷியல் மீடியாக்கள் வந்த பிறகு எங்காவது தப்பு நடந்தால்,லைவ் வீடியோக்களாக அடுத்த நிமிடமே உலகம் முழுக்க வைரலாவதை அன்றாடம் பார்த்துக்கிட்டுதான் இருக்கோம்! ஆனாலும் அத்து மீறல்கள் அரங்கேறிக்கிட்டேதான் இருக்கு என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.

சோஷியல் மீடியாக்கள் வந்த பிறகு எங்காவது தப்பு நடந்தால்,லைவ் வீடியோக்களாக அடுத்த நிமிடமே உலகம் முழுக்க வைரலாவதை அன்றாடம் பார்த்துக்கிட்டுதான் இருக்கோம்! ஆனாலும் அத்து மீறல்கள் அரங்கேறிக்கிட்டேதான் இருக்கு என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.

police fight

நெல்லை மாவட்டதில் உள்ள ‘சுத்தமல்லி’ பகுதியில் வேல் என்பவர் ஹோட்டல் வைத்திருக்கிறார். அங்கே சாப்பிட வந்த ‘சுத்தமல்லி’ காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. ஞானராஜூக்கும்,வேலுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்து கடைக்காரர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர்.

ஹோட்டலில் நடந்த வாக்குவாதம் குறித்து செய்தி உடனடியாக அந்த ஏரியா முழுக்க பரவியிருக்கிறது! ஞானராஜ் பணியாற்றும் அதே ஸ்டேஷனில் இருந்து,எஸ்.ஐ. இசக்கிராஜா சம்பவம் நடந்த ஹோட்டலுக்கு வந்திருக்கிறார்.

fight

வந்த வேகத்தில் ஹோட்டலின் உரிமையாளர் வேலுவை ஹோட்டலுக்கு வெளியே இழுத்துபோட்டு சரமாரியாக அடித்து உதைத்திருக்கிறார். இதனால்,வேலு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்ததும்,அவரை ஆட்டோவில் தூக்கிப்போடும் காட்சியும் அதில் வீடியோவில் பதிவாகியுள்ளது. 

hospital

தற்போது வேலு ‘நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை’யில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து அறிந்த கடை உரிமையாளர்கள்,சம்பந்தப்பட்ட எஸ்.ஐ. இருவர் மீதும் முறையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

whastapp audio

இந்த இசக்கி ராஜா,யார் தெரியுமா!? கோவில்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, ரவுடிகளின் ‘வாட்ஸ்அப்’குரூப்பில் நுழைந்து பகிரங்க மிரட்டல் ஆடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர்! இப்போது மறுபடியும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.