ஹைதராபாத்தில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்தது – பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்

 

ஹைதராபாத்தில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்தது – பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்

சங்கரெட்டி மாவட்டம் ராமச்சந்திரபுரத்தில் தனியார் டிராவல்ஸ் பேருந்து தீப்பிடித்தது.

ஹைதராபாத்: சங்கரெட்டி மாவட்டம் ராமச்சந்திரபுரத்தில் தனியார் டிராவல்ஸ் பேருந்து தீப்பிடித்தது.

சங்கரெட்டி மாவட்டத்தின் ராமச்சந்திரபுரத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு தனியார் பேருந்து தீப்பிடித்ததில் 26 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆரஞ்சு டிராவல்ஸ் நிறுவனத்தின் பேருந்து ஒன்று, மும்பையில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்தின் பின்புற முனையிலிருந்து புகை வந்தது. இதையடுத்து தீப்பிழம்புகள் வெடிக்க அதை கவனித்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி பயணிகளை கீழே இறங்குமாறு எச்சரித்தார்.

அவர்கள் அனைவரும் பேருந்திலிருந்து இறங்கிய சிறிது நொடிகளில் பேருந்து மொத்தமாக தீயால் பயங்கரமாக  எரிந்தது. இதைதி தொடர்ந்து, இந்த சம்பவம் தெரிந்து தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ராமச்சந்திரபுரம் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.