ஹைதராபாத்தில் இளைஞர்களை அடித்து உதைத்த போலீசார் பணியிடை நீக்கம்
இளைஞர்களை தாக்கிய போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத்: இளைஞர்களை தாக்கிய போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு நபர்களை அடித்து உதைத்ததற்காக இரண்டு காவல்துறையினரை இடைநீக்கம் செய்ததாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அஞ்சனி குமார் தெரிவித்தார். ஊரடங்கு நேரத்தில் இருவேறு சம்பவங்களில் இளைஞர்கள் ரத்தம் வரும் அளவுக்கு போலீசாரால் தாக்கப்பட்டனர். ஏப்ரல் 14-ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்ட இரண்டாவது ஊரடங்கை தொடர்ந்து, பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு வெளியே வந்தால் கூட சில போலீசார் மிருகத்தனமாக நடந்து கொள்கிறார்கள். இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
Mirchowk Constable officer Ch Sudhaker is placed under suspension for his unprofessional conduct which caused injury to a civilian. Hyd city police remain committed to safety, security and dignity of a common man.
— Anjani Kumar, IPS, Stay Home Stay Safe. (@CPHydCity) April 28, 2020
மிர்ச்சோக் காவல் நிலையத்தின் ஒரு கான்ஸ்டபிள் மற்றும் கோல்கொண்டா காவல் நிலையத்தின் வீட்டுக் காவலர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மிர்ச்சோக் கான்ஸ்டபிள் சி.சுதாகர் தனது தொழில்முறை ரீதியாக கண்ணியமாக நடந்து கொள்ளாததால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதே காரணத்திற்காக கோல்கொண்டா காவல் நிலையத்தைச் சேர்ந்த வீட்டுக் காவலர் ஹனுமந்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஹைதராபாத் காவல்துறை தலைவர் அஞ்சனி குமார் ட்வீட் செய்துள்ளார். கோல்கொண்டா காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி கே.சந்திர சேகர் ரெட்டியிடம் தனது துணை அதிகாரிகளுக்கு கடமைகளை நிறைவேற்றுவதில் சரியாக விளக்கமளிக்கவில்லை என்பதற்காக ஒரு குற்றச்சாட்டு மெமோவும் வழங்கப்பட்டது.
‘இப்தார்‘ க்காக பழங்களை வாங்கப் போனபோது 19 வயதான அர்பாஸின் தலையை மிர்ச்சோக்கின் போலீஸ்காரர் தடியால் அடித்தார். இதனால் அந்த இளைஞன் தலையிலிருந்து ரத்தம் கொட்டியது. இந்த சம்பவம் நடந்த உடனேயே போலீசாரின் கொடூரத்திற்கு எதிராக அங்கிருந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.
ஷெய்க்பேட்டில் நடந்த இரண்டாவது சம்பவத்தில், அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க வெளியே வந்த 19 வயது ஜுனைத் என்ற இளைஞரைத் தடுத்து நிறுத்திய கோல்கொண்டா எஸ்.எச்.ஓ அவரை தாக்கினார். இதனால் அந்த இளைஞரின் முகத்தில் இருந்து ரத்தம் வடிந்தது.
ஊரடங்கை அமல்படுத்தும்போது காவல்துறையினரால் செய்யப்படும் வன்முறை செயல்கள் குறித்து மக்களிடமிருந்து தொடர்ச்சியான புகார்கள் வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை ஊழியர்கள் மோசமான மொழியைப் பயன்படுத்துவதாகவும், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக வீடுகளில் இருந்து வெளியே வருபவர்களைக் கூட தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மார்ச் 24 ம் தேதி ஊரடங்கு விதிக்கப்பட்டதிலிருந்து மாநில காவல்துறையினரின் கொடூர பல சம்பவங்களை விவரிக்கும் விதமாக அரசியல் ஆர்வலர் எஸ்.க்யூ மசூத் நீதிமன்றத்திற்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் தெலுங்கானா உயர் நீதிமன்றம் ஒரு பொது நல வழக்கை எடுத்துள்ளது.