ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: இடைத்தரகருக்கு 5 நாள் சிபிஐ காவல்; சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

 

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: இடைத்தரகருக்கு 5 நாள் சிபிஐ காவல்; சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கிறிஸ்டியன் மைக்கேலை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கிறிஸ்டியன் மைக்கேலை  5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாவது ஆட்சிக் காலத்தின் போது, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட விவிஐபி-க்கள் பயணிப்பதற்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ரூ.3,600 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அந்த நிறுவனம் ரூ.450 கோடி லஞ்சம் வழங்கியதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

இது தொடர்பான வழக்கில், துபாயில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், இந்தியா கொண்டு வரப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அப்போது, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க வேண்டும் என மைக்கேல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கே. ஜோசப் வாதிட்டார். இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கிறிஸ்டியன் மைக்கேலை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிஐக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.