ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது – கமல்ஹாசன்
ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது. கேட்கிறதா அரசுக்கு? என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
சென்னை: ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது. கேட்கிறதா அரசுக்கு? என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
கஜா புயல் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை நிலைகுலைய செய்துள்ளது. அங்கு மக்கள் அனைவரும் உணவு, தண்ணீர், வீடு என அடிப்படை வசதிகளின்றி இருந்து வருகிறார்கள். ஆனால் முதல்வர் பழனிசாமி ஹெலிகாப்டரில் சென்று பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பார்வையிட சென்றார். மேலும் அவர் நாகை, திருவாரூர் மாவட்டங்களை அவர் பார்வையிடாமல் அவர் பாதியிலேயே திரும்பியது பலரின் கண்டனத்திற்கு உள்ளானது.
தரையில் கால் பாவிட, மக்களோடு மக்களாக நின்று பார்த்தால், கேட்டால்… புரியும் சோகம், தெரியும் உண்மை! ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது. கேட்கிறதா அரசுக்கு?
— Kamal Haasan (@ikamalhaasan) November 22, 2018
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், தரையில் கால் பாவிட, மக்களோடு மக்களாக நின்று பார்த்தால், கேட்டால்… புரியும் சோகம், தெரியும் உண்மை! ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது. கேட்கிறதா அரசுக்கு? என பதிவிட்டுள்ளார்.