ஹீரோ- வில்லன் ஏன் இப்படி நடிக்கிறீங்க? விஜய் சேதுபதியின் தெறிக்கவிடும் பதில்!

 

ஹீரோ- வில்லன் ஏன் இப்படி நடிக்கிறீங்க?  விஜய் சேதுபதியின் தெறிக்கவிடும் பதில்!

ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாஸ்டர் படம்  திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பிகில் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  நடிகர் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். விஜயின் 64-வது படமான இந்தப்  படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லி மற்றும் சென்னையில் நடைபெற்ற நிலையில் தற்போது கர்நாடகாவில் உள்ள சிறைச்சாலையில் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்க இருக்கின்றன.  வரும் ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாஸ்டர் படம்  திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

மாஸ்டரின் போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் என்று கூறப்படுகிறது. காரணம்  ஹீரோ என்பதை தாண்டி கதையில்  தான் நடிக்கும் பாத்திரம் பவர்புல்லாக இருந்தால் வில்லனாகவும் நடிக தயார் என்ற மனதிடத்தில் பயணித்து கொண்டிருக்கிறார் என்பது தான். 

ttn

இந்நிலையில் சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் விருது  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் சேதுபதியிடம்   ‘கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் போதே வில்லனாகவும் நடிக்கிறீர்களே…?’என்று  கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘ இமேஜ் பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. எனக்கு இந்த வில்லன் வேடம் பிடித்து இருக்கிறது. அதனால் அதில் நடிக்கிறேன்’ என்றார். இந்த பதிலை கேட்ட அவரது ரசிகர்கள் அரங்கத்தில் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.