ஹீரோவாக தமிழில் களமிறங்கும் விஜய் தேவரகொண்டா 

 

ஹீரோவாக தமிழில் களமிறங்கும் விஜய் தேவரகொண்டா 

நடிகர் விஜய் தேவரகொண்டா தமிழில் நடிக்கவிருக்கும் படத்திற்கு ஹீரோ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டா தமிழில் நடிக்கவிருக்கும் படத்திற்கு ‘ஹீரோ’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இப்படத்தின் மூலம் கோலிவுட்,டோலிவுட் என தனக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். அதை தொடர்ந்து கீதா கோவிந்தம்’, ‘டாக்ஸிவாலா’ போன்ற திரைப்படங்கள் நடித்து ஹிட் கொடுத்துள்ளார்.

தெலுங்கில் வெற்றியானதையடுத்து தமிழில் நோட்டா படத்தின் மூலம் அறிமுகமானார். அத்திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்குச் செல்லவில்லை என்றாலும் அவரின் ரசிகர்கள் மத்தியில் இன்னும் மாவுசு குறையாமலே உள்ளது. 

vijay devarakonda

இந்த நிலையில், விஜய் தேவரகொண்டா ஹீரோ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதை காக்கா முட்டை படத்திற்கு வசனம் எழுதிய ஆனந்த் அண்ணாமலை இயக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது.

vijay devarakonda

விளையாட்டு சம்பந்தப்பட்ட திரில்லர் கதையாக உருவாகும் இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பேட்ட’ படத்தில் நடித்த மாளவிகா மோகனன் நடிக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு  வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி புதுதில்லியில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

vijay devarakonda

மேலும் மற்ற நடிகர்,நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் படத்திற்கும் ஹீரோ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதால், எந்த படத்தின் டைட்டில் மாற்றப்படும் என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.